வேளச்சேரி: சென்னை பெரும்பாக்கத்தில் ஓட்டல் மேலாளர் வீட்டில் 80 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பிஸ்வாஸ்(40). இவர் கிண்டியில் பிரபல தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற பிஸ்வாஸ், மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.