பெய்ரூட்: இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது. சிரியா - இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பதுங்கி உள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகள் மீது இஸ்ரேல் விமானப்படையும் தாக்குதல் நடத்தும். இந்நிலையில், இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் சிரியாவில் இருந்து நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதைத்ெதாடர்ந்து ஒரு சில மணி நேரங்களில் சிரியா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.