திருமலை: ஆந்திராவில் நாகப்பாம்புக்கு பொதுமக்கள் தண்ணீர் கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், நீர்நிலைகள் தண்ணீரின்றி வற்றி காணப்படுகிறது. வனப்பகுதியில் வசிக்கும் யானை, மான் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துவிடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாக்காவில் உள்ள ஒரு காலனியில் நாகப்பாம்பு ஒன்று சுற்றியது.