டெல்லி: சிகெரெட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தேசிய புற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகர் நரேஷ் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புற்றுநோய்சார்ந்த இறப்புகளில் 40 சதவீதம் புகையிலை பழக்கத்தால் உண்டாவதாக கூறியுள்ளார். சிகெரெட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக அவர் கூறியுள்ளார்.