சென்னை: எழும்பூர் இர்வின் சாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு மாட வீதியை சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் (46) என்பவர், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018ம் ஆண்டு வரை அறை எடுத்து தங்கினார். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த சத்திவேல், ஓட்டலில் தங்கிய நாள் முதல் அறை வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மொத்தம் 26.74 லட்சம் அவர் செலுத்த வேண்டி இருந்தது. அதில், முன் பணம் மற்றும் தங்கி இருந்தபோது சிறுக சிறுக ₹9 லட்சம் கொடுத்து இருந்தார். மீதம் 17 லட்சத்து 47 ஆயிரத்து 402 செலுத்த வேண்டும்.