பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலைய பிளாட்பாரம் எண் ஒன்றில் தண்டவாளம் அருகே ெவடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை 8.45 மணி அளவில், மைசூருவில் இருந்து ஒரு ரயில் வந்து நின்றது. அதிலிருந்து கிருஷ்ணா என்ற போலீஸ்காரர் இறங்கினார். பின்னர், போலீஸ் நிலையம் செல்ல 5வது பிளாட்பாரத்தில் இருந்து முதலாவது பிளாட்பாரத்திற்கு சென்றார்.
அப்போது பிளாட் பாரம் எண் ஒன்றில் தண்டவாளம் அருகில் சந்தேகம் எழும் வகையில் வெடிகுண்டு போல ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.