சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்நேற்று வெளியிட்ட அறிக்கை:
உலக புகையிலை ஒழிப்பு நாள் மே 31ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில், ‘புகையிலை உங்கள் மூச்சை எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர், நுரையீரல் நலனை காப்பாற்ற வேண்டும்’ என்பதை இந்த நாளின் நோக்கமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இம்முழக்கத்துக்கு முற்றிலும் மாறாக சென்னையில் சட்டவிரோத புகையிலை விளம்பரங்களை சிகரெட் நிறுவனங்கள் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ‘அடுத்த தலைமுறையினருக்காக புதியது உருவாகிறது’ என்ற வாசகத்துடன் ஐ.டி.சி நிறுவனம் சென்னை மாநகரம் முழுவதும் சிகரெட் விளம்பரங்களை செய்துள்ளது. இது சட்டவிரோத செயல் ஆகும். சிறுவர்களை சீரழிக்கும் இந்த விளம்பரங்களை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.