திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (48). இவர், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார். நேற்று காலை கண்விழித்து பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த 12 சவரன் நகைகள் ₹20 ஆயிரம், அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.