புதுடெல்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் ரூ18 கோடியில் சொத்துகளை வாங்கினார். இதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக டெல்லி நீதிமன்றத்தில் வதேரா முன்ஜாமீன் பெற்றுள்ளார்.