புதுடெல்லி: ‘பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்து பேசும் தேதியும், இடமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என மத்திய வெளியுற அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் சீனா சென்ற பிரதமர் மோடி, உஹான் நகரில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா வரும்படி ஜின்பிங்குக்கு மோடி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, கடந்த ஜூனில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போதும் மோடி - ஜின்பிங் சந்திப்பு நடந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு நாடுகளும் தங்கள் உறவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.