இந்தியாவில் மொபைல் போன் இல்லாத மக்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சந்தையில் பல விதமான வசதிகளுக்கு ஏற்றார்போல் ரூ.2ஆயிரம் முதல் ரூ.2லட்சம் வரை செல்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செல்போனை வாங்கியவுடன் அதற்கு தேவையான உதிரிபாங்களை கட்டாயம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கார், இரு சக்கர வாகனம் வாங்கியவுடன் எஸ்டிரா பிட்டிங்ஸ் வகை களை அவரவர் வசதிக்கு ஏற்றார்போல் வாங்கி தங்கள் வாகனத்தை மேலும் அழகாக காட்டுவார்கள். இதபோல் செல்போன் வாங்கியவுடன் அவரவரவர் வசதி க்கு ஏற்றார்போல் எஸ்டிரா பிட்டிங்ஸ் வாங்கி பயன்படுத்த தொடங்குவார்கள். இதனால் புதிய செல்போன் விற்பனை நிலையங்களை விட செல்போன் உதிரி பாக ங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக் கும். குறிப்பாக செல்போன் கவர், மெம்மரி கார்டு, திரையை பாதுகாக்கக் கூடிய ஸ்கீரின் கார்டு உள்ளிட்ட பாகங்கள் கண்டிப்பாக செல்போன் வாங்கும் போது, வாங்குவார்கள். இதனால் தமிழகத்தில் இதுபோன்ற செல்போன் பாகங்கள் விற்பனை செய்ய பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை கடைகள் தொடங்கப்பட்டது. இதனால் எங்கு பார்த்தாலும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது.