சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐயிடம் அவகாசம் கேட்பு

கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் சிபிஐயிடம் அவகாசம் கேட்டுள்ளார். விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் கேட்டு சிபிஐக்கு முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் கடிதம் அனுப்பி உள்ளார். சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கை நீர்த்துப்போக செய்ததாக கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் ராஜீவ்குமார் இன்று விசாரணைக்கு ஆஜராக சிபிஐ ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.

Related Stories: