ஊட்டி ஏரியில் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி: ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டியதால் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், படகு சவாரி செய்ய கடும் போட்டி நிலவியது.

படகு சவாரி செய்வதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். குறிப்பாக, மிதி படகு மற்றும் 10 மற்றும் 15 பேர் பயணிக்க கூடிய மோட்டார் படகுகளில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். மேலும் கூட்டம் அலைமோதியதால் பல மணி நேரம் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்திருந்ததால், படகு இல்லத்தில் வாகனம் குவிந்திருந்தது. இதனால் படகு இல்லம் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: