மெக்சிக்கோவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோ: மெக்சிக்கோவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் கடும் வெயில் சுட்டெரித்து வருவதன் காரணமாக பைன் மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது. அண்மையில் ஜல்பான் டி லா சியர்ரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவிய நிலையில் தீயணைப்பு துறையினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டர் ஒன்று அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் கடற்படை குழுவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். மேலும் உயரிழந்தவர்களின் உடலை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: