சிக்கிம்: சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா எஸ்.கே.எம். கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் என்ற பி.எஸ்.கோலே தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ளது. சிக்கிமில் சிக்கிம் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அந்த மாநிலத்தை ஆண்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்.) 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் கங்காபிரசாதை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், 17 எம்எல்ஏக்களுடன் சென்று சந்தித்து ஆட்சியமைக்க சனிக்கிழமை உரிமை கோரினார். முன்னதாக, ஊழல் வழக்கில் பிரேம் சிங் தமாங், ஓராண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் சட்ட ஆலோசனை பெற்று, ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவரிடம் ஆளுநர் தெரிவித்தார்.