தொண்டாமுத்தூர்: கோவையில் குடியரசு கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிடர் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கோவை ஆர்.எஸ்.புரம் அருகே குமாரசாமி காலனி பகுதியை சேர்ந்த ரத்னவேல் மகன் சந்தோஷ்குமார் (26). ஜோதிடரான இவர் பரிகார பூஜைகளும் நடத்தி வந்தார். திருமணம் ஆகாதவர். இந்திய குடியரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சந்தோஷ்குமாருக்கும், சிலருக்கும் தகராறு இருந்துள்ளது. நேற்று மதியம் இவர் வீட்டிற்கு ஆறுமுகம், குண்டு ரமேஷ், செந்தில், கருண் ஆகியோர் சென்று மீண்டும் குடியரசு கட்சியில் சேரவேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இதை சந்தோஷ்குமார் ஏற்க மறுக்கவே கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர்.