கொழும்பு: ‘‘இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் மனித குண்டு தீவிரவாதிகள் 9 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், 260 பேர் பலியாயினர். ஐஎஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில், இலங்கையில் உள்ள தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் சிவில் சொசைட்டி பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், ரணில் அளித்த பேட்டியில் கூறியதாவது: