வெனிசுலா: வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர். வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச் சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது.