துபாய்: பாலைவனம் நிறைந்த ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர் மழை கிடையாது, பெரிய ஆறுகள் கிடையாது ஆனாலும் ஆண்டுதோறும் விவசாயம் வளர்ச்சியடைந்து வருகிறது கடந்த ஆறு மாதங்களில் இயற்கை விவசாய பண்ணைகள் 59 சதவீத அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலும் பாலைவன பூமிதான். ஆனால், இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டரில் விவசாயம் செய்யப்படுகிறது என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். 1971ம் ஆண்டில் 4000 விவசாயப் பண்ணைகள் இருந்தன. இது 2011 கண்கெடுப்பின்படி 35,704 என அபரிமிதமாக வளர்ந்து நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ராசல் கைமா, அல் அய்ன், புஜைரா போன்ற பகுதிகளில் விவசாய பண்ணைகளில் கத்தரிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, மிளகாய், பீட்ரூட் மற்றும் கிழங்கு என பல்வேறு வகை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது.
பாலைவன பகுதிகள் விவசாயத்திற்கு கடினமானவை என்பதால், தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுகிறது.