கடலூர் : கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் அப்துல் ரஷீத் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாத அமைப்புடன் ரஷீதுக்கு தொடர்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் படி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் ரஷீத் வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.