ரயில் பயணிகளிடம் நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டது குறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பேட்டி

கோவை: ரயில் பயணிகளிடம் நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டது குறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் கோவையில் பேட்டியளித்துள்ளார். 3ம் தேதி மாவெலிபாளையம் அருகே ரயில் மெதுவாக சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். குடும்பத்துடன் வந்து வட மாநிலத்தவர்கள் ரயில்களில் கொள்ளையடித்து செல்கின்றனர்.வட மாநில கொள்ளையர்கள் பிச்சை எடுப்பது போல் நடித்து ரயில் நிலையங்களில் வேவு பார்க்கின்றனர். மக்களுக்கு சந்தேகம் இருந்தால் 9962500500 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: