காத்மாண்டு: நேபாளம் நாட்டில் இன்று பிற்பகல் லேசானது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 1.53 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளயினர். நேபாள தலைநகர் காத்மாண்டூவில் இருந்து மேற்கு நோக்கி 66 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதோடு, வீடுகளில் இருந்த பொருட்களும் உருண்டன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக எந்தவித பொருள் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.