சிட்னி: கடந்த சில தினங்களாக ரசிகர்கள் அளித்த அளவில்லா அன்புக்கு வாட்சன் நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், முழங்காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது, ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். அந்த காயத்தால் அவரது முழங்காலில் 6 தையல் போடப்பட்டுள்ளது. தனக்கு காயம் ஏற்பட்டதை வெளியே சொல்லாமல் வெற்றிக்காக வாட்சன் போராடிய உண்மை வெளியில் தெரியவர, தோற்றாலும் பரவாயில்லை என ரசிகர்கள் அவரை கொண்டாடித்தீர்த்தனர்.