கோவை: கோவை இருகூர் ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி 60 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருகூர் ரயில்வே மேம்பாலம் சேலம்-சென்னை புறவழிசாலையில் அமைத்துள்ளது. இந்த சாலையில் கேரளாவுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் சென்னைக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களுருவில் இருந்து கோவைக்கு பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. பழங்களை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர் பெயர் ராகவேந்திரா, அவருக்கு வயது 24. அதேபோல கேரளா மாநிலத்தில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த இரு லாரிகளும் சேலம் ரயில்வே மேம்பாலத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.