நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் பவன் குமார் ஜெயின் (66). இவர், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் அறுவை சிகிச்சை செய்யும் நபர்களுக்கு அத்தியாவசிய சோதனைகள் எதையும் மேற்கொள்ளாமல், போதை மருந்தை வலி நிவாரணியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவ மோசடியிலும் ஈடுபட்டதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இவரது சிகிச்சையில் 2009ல் நோயாளி ஒருவர் மூச்சு திணறி இறந்தார்.