கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 5 நட்சத்திர ஓட்டலில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 3 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றிவளைத்தது. இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில், பேர்ல் கான்டினன்ட் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு வழக்கம்போல் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். நேற்று மாலை 4.30 மணி அளவில், ஓட்டலில் சில தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் ஓட்டலை சுற்றிவளைத்தனர்.