துபாயில் தங்கம் வென்ற சென்னை மாணவி

துபாயில் ‘புடோகன் கப் - 2019’ கராத்தே சாம்பியன் போட்டி நடைப்பெற்றது.  இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  இந்தியா சார்பில் தமிழக மாணவி அ.அனீஷா கலந்துகொண்டார். இவர் 9 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான  கதா பிரிவில் தங்கப்பதக்கமும்,  குமிட்டே பிரிவில்  வெள்ளிப்பதக்கமும்  வென்றார். சென்னை   சர்ச் பார்க் கான்வென்ட் வளாகத்தில் உள்ள தூய இருதய பள்ளியில்  4ம் வகுப்பு படிக்கிறார். பிரவுன் பெல்ட் பெற்றுள்ள அனீஷாவுடன் அவரது பயிற்சியாளர் டாக்டர் கெபிராஜியும் துபாய் சென்றிருந்தார். சென்னை திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: