சென்னை: கண் அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்த வட மாநில பெண்ணி டம் 20 ஆயிரத்தை பறித்து சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் பன்குரா பகுதியை சேர்ந்தவர் சிபானி மண்டி (55). இவர், தனது கண் அறுவை சிகிச்சைக்காக கடந்த 8ம் தேதி அதிகாலை ரயில் மூலம் சென்னை வந்தார். பின்னர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில், எழும்பூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தின் மேல் ஆட்டோ சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 3 பேர், சிபானி மண்டி வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினர். அதில், சிகிச்சைக்காக கொண்டு வந்த ₹20 ஆயிரம் மற்றும் 3 ஏடிஎம் கார்டுகள் இருந்தன. இதுகுறித்து சிபானி மண்டி, பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.