சூலூர் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி சிக்கியது

சூலூர்: சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, நேற்று மாலை சூலூர் அருகே சோளகாட்டுப்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் நிறுவன வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஏடிஎம் மையத்திற்கு ஆவணமின்றி  ரூ.1.98 கோடி பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. எனவே வாகனத்துடன் பணத்தை கைப்பற்றி சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் அதை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: