டெல்லி: நரேந்திர மோடியின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், அதை சீர்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது குற்றம் சாட்டுவது உள்பட தனி நபர் தாக்குதல்களை நரேந்திர மோடி மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமராக இருப்பவர் எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு மோடி பேசுவதில்லை என்றும், தரமற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வருவதாகவும் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.