காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் காபூலில் உதவி மையம் ஒன்றில் நின்றிருந்த பொதுமக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தோடு மறைந்திருந்த பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.