சென்னை: திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அ.ம.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் நேற்று கைது செய்யப்பட்டார். தேனி சிறையில் உள்ள செல்வத்தைச் சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்திலிருந்து இன்று வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.