தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம் 11ம் கட்ட விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து சிபிஐ விசாரணை  நடந்து வரும் நிலையில் தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. ஆணையத்தின் 11ம் கட்ட விசாரணை நேற்று துவங்கியது.  வரும் 10ம் தேதி வரை விசாரணை நடக்கிறது. இதில் மொத்தம் 72 பேர் விசாரிக்கப்பட உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: