கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகில் திருவண்ணாமலை மாவட்ட ஆய்வு நடுவத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் எ.சுதாகர் தலைமையில் நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலாளர் சு.பாலமுருகன், எ.சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது கி.பி.6ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து நடுகல்லை கண்டுபிடித்தனர். இதுகுறித்து சு.பாலமுருகன் கூறியதாவது: ‘இந்த நடுகல் போரில் இறந்த வீரருக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கல். இந்த கல்லில் உள்ள உருவ அமைப்பானது இடது கையில் வில்லும், வலது கையில் வாளும், இடையில் சிரிய குத்து வாளும், வலது கால் நீட்டியும், இடதுகாலினை மடக்கியும் போருக்கு செல்வது போல் உருவம் அமைந்துள்ளது.