புதுச்சேரி, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; மத்தியில் மீண்டும் அமையவுள்ள பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் வரை நீடிக்காது. பாஜக கூட்டணி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என்று அவர் கூறினர்.
The post மக்களவை தேர்தலில் மோடிக்கு நாட்டு மக்கள் தக்க பாடம்.. பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி..!! appeared first on Dinakaran.