ஈரோடு: கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் 1958 முதல் 60 ஆண்டுக்கும் மேலாக பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் அரசாணை, விதிமுறை, காவிரி தீர்ப்பு என எதுவும் பின்பற்றப்படவில்லை. ஆற்றின் கரையிலும், பழைய பவானி பாசன கால்வாய் கரையிலும் இருக்கும் ஆலைகளின் கண் அசைவிற்கு ஏற்பவே நீர் நிர்வாகம் நடந்து வருகிறது. விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையில் நீர் நிர்வாகம் நடந்து வந்துள்ளது.