திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருவனந்தபுரம் தம்பானூரில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் சுற்றிக்கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும் அவருக்கு சிங்கள மொழி மட்டுமே தெரிந்திருந்தது.
போலீசார் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் இலங்கையைச் சேர்ந்த மலூக் ஜூத் மில்க்கன் டயஸ்(35) என்பது தெரியவந்தது. ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லை.