ஆம்பூர்: ஆம்பூரில் நேற்று காலை தண்டவாளத்தை கடந்த தொழிலாளி, பாட்டி, பேரன் ஆகியோர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னக்கரும்பூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (40), ஷூ கம்பெனி தொழிலாளி. இவரது அக்காள் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு சத்தியாநகரை சேர்ந்த துரை மனைவி பானுமதி (50). இவரது பேரன் நித்திஷ் (7). சங்கரின் சகோதரர் அனுமுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்துவர சங்கர், பானுமதி இருவரும் பேரன் நித்திஷூடன் நேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்தனர். ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு நடைமேடை வருவதற்காக தண்டவாளத்ைத கடக்க முயன்றனர். ஒரு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை தாண்டி மற்றொரு தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.