கோவை: கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் நாகராஜ் கொலை வழக்கில் அவரது மனைவி அமுதா மற்றும் ஆண் நண்பர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், அமுதா மற்றும் சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.