கொடைக்கானல்: அக்னி வெயில் மற்றும் கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். ‘மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. கோடை மற்றும் வார விடுமுறை, அக்னி வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நேற்று கொடைக்கானலில் குவிந்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூட்டம் அதிகளவு இருந்தது. முக்கிய சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூண் பாறை, கிரீன் வேலி வியூ பகுதிகளில் மேக மூட்டம் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள், நீண்ட நேரம் கொடைக்கானலின் ரம்மிய அழகை கண்டு ரசித்தனர்.