புதுடெல்லி: டெல்லியில் ஓட்டலில் இயங்கி வரும் லோக்பால் அலுவலகத்துக்கு நிரந்தரமாக செயல்படும் வகையில் வேறு இடம் தேடி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உட்பட அரசின் உயர் பதவிகளில் பணியாற்றுவோர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக லோக்பால் அமைக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டார். இவருக்கு கடந்த மார்ச் 23ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரமாணம் செய்து வைத்தார். லோக்பால் உறுப்பினர்களாக எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். அலுவலகம் இல்லாததால் லோக்பால் டெல்லியில் உள்ள 5நட்சத்திர ஓட்டலில் இயங்கி வருகிறது.