ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, பூனம் யாதவ் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை

மும்பை: இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. சர்வதேச  விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த  வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.

இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அவ்வகையில், இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா மற்றும் பெண் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின பெயர்களை இந்திய  கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: