கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்து வீடுகளிலும் சோதனை செய்ய அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கொழும்பில் நிரந்தரமாக வசித்து வருவோர் தங்களை பதிவு செய்துகொள்ள இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர் கொழும்பில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.