பாட்டக்கரை பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருச்செந்தூர்: பாட்டக்கரை பத்திரகாளி அம்மன் கோயிலில் 4508 திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.குரும்பூர் அருகேயுள்ள பாட்டக்கரை பத்திரகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 4508 திருவிளக்கு பூஜை நடந்தது.

இதில் மதுரை, நெல்லை, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், வைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் கோயில் தர்மகர்த்தா ஜெயராகவன், விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: