சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 175 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 57, மணிஷ் பாண்டே 83 ரன்கள் அடித்தனர். சென்னையில் வாட்சன் 96 ரன்கள் எடுத்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி