தென்காசி: குற்றாலத்தில் நேற்றிரவு இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழுவதால் சுற்றுவட்டார மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரமாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவில் பலத்த இடியுடன் மழை தொடர்கிறது. இந்நிலையில் நேற்றும் பகலில் வெயில் நீடித்த நிலையில் இரவு 9.15 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக இரவு 12 மணி முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. இதுபோல் ஐந்தருவியிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவில் அருவிகளில் தண்ணீர் கலங்கலாக விழுந்த நிலையில் இன்று (ஏப்.23) காலை முதல் தண்ணீர் தெளிவடைந்து பால்போன்று வெண்மை நிறத்தில் கொட்டுகிறது.