சிவகங்கை : சிவகங்கையில் பெண்ணை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை அருகே செட்டிகுளத்தில் 2013-ம் ஆண்டு சேது என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.