வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை...... சிந்தித்து வாக்களியுங்கள்: பிரதமர் மோடி

குஜராத்: வெடிகுண்டை விட மிகவும் வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நிசான் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.  பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மோடி கூறியதாவது: என் தாய் வீடான குஜராத்தில் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தன்மூலம் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். கும்பமேளாவில் புனித நீராடினால் அடையும் தூய்மையை வாக்களிப்பதன் மூலம் உணரலாம். தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு, அதேபோல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது நமது வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டை விட மிகவும் சக்தி வாய்ந்தது வாக்காளர் அடையாள அட்டை. எனவே நாம் நமது வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை புரிந்து கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: