புதுடெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரில், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்து தரம் தாழ்த்தி கொள்ள விருப்பமில்லை என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர் நலச் சங்கம் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக அது வெளியிட்ட தீர்மானத்தில், `தலைமை நீதிபதி மீது ஜோடிக்கப்பட்ட, புனையப்பட்ட இந்த குற்றச்சாட்டிற்கு உச்ச நீதிமன்ற ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.