ஆலந்தூர்: சென்னை மணப்பாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மூர்த்தி (32), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் (29), முரளி (29) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் 3 பேரும் சொந்த ஊர் செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் மணப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் அமர்ந்து பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது கிண்டியில் இருந்து போரூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் அமர்ந்திருந்த 3 பேர் மீது வேகமாக மோதியது.